’சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா!’ என்பார்கள் முருக பக்தர்கள். ’முருகன்’ என்ற சொல் போலவே ‘தேன்’ என்ற சொல்லைச் சொல்லும்போதும் நம் நாவும் மனமும் இனிக்கவே செய்கின்றன. அதனால்தான், மணிவாசக அடிகளும் தம் திருவாசகத்தில் ’தேனாய் இன்னமுதமுமாய்த் தித்திக்கும் சிவபெருமான்’ என்று சிவனைத் தித்திக்கும் தேனுக்கு ஒப்புமை காட்டுகின்றார். இனிமைக்கு மட்டுந்தான் தேன் உரியதா? இல்லை…அதையும் தாண்டிய அபூர்வ மருத்துவ குணங்கள் பலவும் நிறைந்த அருமருந்து தேன்!